ஜூன் மாதத்­துக்கு முன்னர் எந்த தேர்­த­லையும் நடத்த முடி­யாது!!!

எதிர்­வரும் ஜூன் மாதத்­திற்கு முன்னர் எந்­த­வொரு தேர்­த­லையும் நடத்த முடி­யாது. எந்­த­வொரு தேர்­தலும் குறிப்­பிட்ட தினத்­திற்குள் நடத்­தப்­ப­டா­விட்டால் அது ஜன­நா­யக விரோதச் செய­லா­கி­விடும் என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.
 இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தேர்­தல்கள் செய­ல­கத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 
 தொடர்ந்து அவர் குறிப்­பி­டு­கையில்,
 எந்­த­வொரு தேர்­தலும், குறிப்­பிட்ட தினத்­திற்குள் நடத்­தப்­ப­டா­விட்டால் அது ஜன­நா­யக விரோதச் செயல் என்­பதை இதற்கு முன்­னரும் உத்­தி­யோ­பூர்­வ­மாக நாம் கூறி­யுள்ளோம். ஜன­நா­ய­கத்­திற்கு ஏற்­படும் பாதிப்­பினால் சர்­வ­ஜன வாக்­கு­ரிமை தொடர்­பாக மக்­க­ளுக்கு உள்ள நம்­பிக்கை இழந்­து­விடும் அபா­யமும் ஏற்­படும். நாங்கள் அந்த சந்­தர்ப்­பங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருந்தோம். 
 1981ஆம் ஆண்டு மே மாதம் நடை­பெற்ற சம்­ப­வங்­களின் பின்னர் ஆங்­கி­லத்தில் பெலட் எனப்­படும் வாக்குச் சீட்டு மக்­களின் நம்­பிக்கை இழப்­பிற்குப் பின்னர்; புலட் என்று மாறி­யதால் ஏற்­பட்ட விளை­வு­களை நாங்கள் அறிவோம். அந்த சந்­தர்ப்பம்   ஏற்­ப­டாது என நம்­பு­கிறோம், பிரார்த்­திக்­கின்றோம்.  ஜன­நா­யகம் மற்றும் வாக்­கு­ரிமை தொடர்பில் மக்கள் வைத்­தி­ருக்கும் நம்­பிக்கை குறை­வா­காது, அந்த நம்­பிக்கை குறை­வா­கும்­படி எவரும் செயற்­ப­டவும் மாட்­டார்கள் என்று நம்­பு­கிறோம். 
 இது­தொ­டர்பில் தேர்­தல்கள் ஆணைக்­குழு எடுக்­க­வேண்­டிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ளும். ஜுன் மாதத்­திற்கு முன்­பாக அல்ல, ஒரு வரு­டத்­திற்கு முன்­பாக தேர்­தல்­களை நடத்த முடி­யாது. மே மாதம் வெசாக் தினத்­திற்கு முன்­பாக நடத்­து­வது குறித்து பிரச்­சினை காணப்­ப­டு­கி­றது. ஏப்ரல் 30ஆம் திக­திக்கு முன்னர் தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தா­னது முடி­யாத காரி­ய­மாகும். தேர்­தலை நடத்த 75 நாட்கள் எமக்கு அவ­சி­ய­மாகும். தொகுதிகள் தொடர்பில் எமக்கும் தெரியாது. எவ்வாறாயினும் அரசியலமைப்பு மாற்றம், தேர்தல்கள் முறைமை மாற்றம் என்பன எவை இடம்பெற்றாலும் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடைபெறும் என்றார்.

No comments:

Post a Comment

Pages