வெட் வரி திருத்த சட்டமூலம் மீதான விவாதம் இன்று!!!
பெறுமதி சேர் வரி திருத்தச்சட்டமூலம் இன்று(26) புதன்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்தே குறித்த திருத்த சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்று நிறைவேற்றிக்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில் பெறுமதி சேர் திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக நான்கு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனினும் இது குறித்தான தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஒன்றிணைந்த எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்புக்கு மத்தியில் பெறுமதி சேர் திருத்தச்சட்டமூலம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பெறுமதி சேர் வரி (வெட் வரி) விதிப்பானது கடந்த மே மாதம் 2 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.
எனினும் ஒன்றிணைந்த எதிரணி நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்ததன் காரணமாக தற்காலிகமாக வரி விதிப்பினை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. அதன்படியே தற்போது திருத்தப்பட்ட சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment