முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யவேண்டாமென பலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு தற்போது ஓய்வு பெற்றுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு தனது அறிக்கையை இம்மாத இறுதியில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவிடம் கையளிக்க தயாராகவுள்ள நிலையிலே இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், குர்ஆன் மற்றும் ஹதீஸை முன்னிறுத்தியே தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்ளைச் செய்வதிலிருந்தும் உலமாசபையை தவிர்த்து கொள்ளும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவுக்கு முரணான எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளவேண்டாமெனவும் திருத்தங்கள் ஷரீஆவுக்கு உட்பட்டதாகவே அமையவேண்டும் எனவும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபிடம் கோரிக்கை விடுத்துள்ளது

No comments:
Post a Comment