முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய கட்டடம் திறப்பு நிகழ்வு இன்று!!!


முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்காக புதியதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உள்ளிட்ட தலைமையில் நிகழ்ச்சி இடம்பெறும்.
புதிய கட்டடம் 600 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது என முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.எச்.எம்.சமீல் தெரிவித்தார்.
இக்கட்டிடம் கொழும்பு -10 ரி. பி. ஜாயா மாவத்தை 180 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ...

No comments:

Post a Comment

Pages