ஜெயலிதா கடந்துவந்த பாதை!!!

ஜெயராமன், சந்தியா தம்பதிகளுக்கு 1948, பிப்ரவரி 24ல் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் ஜெயலலிதா பிறந்தார். இவரது செல்லப் பெயர் அம்மு.
2 வயதில் தந்தையை இழந்தார். தந்தை இறந்த பின்னர் தாய் மற்றும் சகோதரனுடன் பெங்களூர் இடம் பெயர்ந்தனர்.
அவரது தாய் சந்தியா சினிமாவில் நடித்து வந்தார்.சென்னையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்டில் பள்ளிப் படிப்பை முடித்த ஜெயலலிதா குடும்ப சூழல் காரணமாக தனது 15 வயதில் சினிமாவில் நடிக்கத் துவங்கினார்.
பரதநாட்டியம், குச்சிப்புடி, மணிப்பூரி நடனங்களை கற்றவர். அவர் நடித்த சில படங்களில் பாடலும் பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், மலையாளம் என பல மொழிகளை அறிந்தவர் முதன் முதலாக 1961ல் ‘Epistle’ என்ற ஆங்கிலப் படத்தில் ஜெயலலிதா நடித்தார்.
1964ல் ‘சின்னாட கோம்பே’ என்ற கன்னட திரைப்படத்தில் இவரை முதன் முதலாக பி.ஆர். பந்தலு அறிமுகப்படுத்தினார்.
தனது தாய் சந்தியாவுடன் ஜெயலலிதா 1965ல் ”வெண்ணிறாடை” என்ற தமிழ் படத்தில் இவரை மறைந்த இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் திரையுலகில் முதன் முதலாக கை இல்லாத ஜாக்கெட், ஸ்கர்ட், கவுன், வுல்லன் சூட் அணிந்து நடித்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது
1966ல் ‘மனசுலு மமதலு’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.
1977ல் சிவாஜியுடன் நடித்த ‘பட்டிக்காடா பட்டிணமா’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை இந்தப் படம் பெற்றது.1972ல் பட்டிக்காடா பட்டிணமா, சூரிய காந்தி, ஸ்ரீ கிருஷ்ண சத்யா ஆகிய திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்த இவருக்கு 3 ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது.
1960 மற்றும் 1970களுக்கு இடைப்பட்ட காலத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆருடன் அதிக வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தர்மேந்திராவுடன் இசாத் என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார்.
1982ல் எம்ஜிஆர் துவக்கிய அதிமுக-வில் உறுப்பினராக இணைந்தார். இதுதான் இவரது அரசியல் பிரவேசம். இதே ஆண்டில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் பேசினார்.
1983ல் இவரை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர்., நியமித்தார். அதே ஆண்டில் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
1984ல் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர் 1989வரை அந்தப் பதவியில் நீடித்தார்.
1984ல் உடல் நலம் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த ஆண்டில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட அதிமுக சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றது.
1987ல் எம்.ஜி.ஆர்., மறைந்தார். அதிமுகவும் இரண்டாக உடைந்தது. இந்திய தேர்தல் கமிஷன் இரட்டை இல்லை சின்னத்தை முடக்கியது.
1991ல் தமிழத்தில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டு மொத்தமுள்ள 234 இடங்களில் 225 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் இரண்டாவது பெண் முதல்வர் மற்றும் சிறு வயதில் முதல்வரானவர் என்ற சிறப்பு பெயரைப் பெற்றார்.
அதே ஆண்டில் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் போட்டியிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து 2001, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். ஆறாது முறை முதல்வரானவர் என்ற சிறப்பையும் பெற்றார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 2014 செப்டம்பரில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 100 கோடி அபராதம் என தண்டிக்கப்பட்டு, சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
2015ல், சொத்துக் குவிப்பு வழக்கில் இவர் குற்றமற்றவர் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் இவரை விடுவித்தது தனது 3 வயதில் பரதநாட்டியம் கற்கத் துவங்கினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் 1991ல் நடந்த தேர்தலின்போது ஜெயலலிதா .மறைவுக்குப் பின்னர் புனிதர் பட்டம் பெற்ற அன்னை தெரசாவுடன் ஜெயலலிதா.

No comments:

Post a Comment

Pages