ஆறு வயது சிறுமி ஒருவரும், வயோதிபர் ஒருவரும் கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தெரணியகளவில் இடம்பெற்றுள்ளது.
தெரணியகல மாகல பகுதியில் ஆறுவயது சிறுமி, வீட்டில் வசித்த வயோதிபர் மற்றும் சிறுமியின் தயார் உள்ளிட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட கூறிய ஆயுத தாக்குதல் காரணமாக சிறுமியும் வயோதிபரும் இறந்துள்ளதோடு, சிறுமியின் தயார் தீவிர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேக நபர் ஒருவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment