முன்னாள் நகர பிதா கே.ஏ. பாயிஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் புத்தள நகர சபை தலைவருமான கே.ஏ. பாயிஸ் உள்ளிட்ட குழுவினர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் கண்டி காரியாலயத்தில் இன்று (23) சந்தித்து கலந்துரையாடினர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான கே.பாயிஸ் தேசியப் பட்டியலில் MP பதவி வழங்க வேண்டுமென மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமிடம் பாயிஸின் ஆதரவாளர்கள் வழியுறுத்தியதன் காரணமாக மு.கா தலைவர் அதற்கு இணக்கம் தெரிவித்து எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கியுள்ளதாக பாயிஸின் ஆதரவாலர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே புத்தளம் மாவட்டத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் நவவி நியமிக்கப்பட்டது போல பாயிசும் MP ஆகினால் புத்தளம் மாவட்டம் இரண்டாவது MP ஐப் பெற்று புத்தளம் மாவட்டம் அபிவிருத்தியில் முன்னேறும் எனும் தெரிவிக்கப்படுகின்றது

No comments:
Post a Comment